
இவர் தமிழீழ தலைநகர் திருமலையில் பிறந்தார் லெப்ரினன் சீலன். அண்ணாவின் சொந்த பெயர் லூக்காஸ் சள்ஸ் அன்ரனி. சிறுவயதில் இருந்தே இலங்கை இராணுவதின் கொடும்செயலை பார்த்து விரக்தி அடைந்தார். பாடசாலையில் படிக்கும் போது இலங்கை கொடியினை எரித்தார் . அதற்காக தண்டனையும் அனுபவித்தார்.
சரி, அமைப்புக்குள் எப்படி வந்தார் திருமலையில் ஆட்களை சேர்க்க போராளி ஒருவர் சென்று இருந்தார் அவர் எமது அமைப்பு பற்றி விளக்கம் அளித்தார் அவரும் அமைப்பில் இணைந்து கொண்டார். இவர் அந்த காலகட்டதில் அமைப்பில் தலைவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது எல்லாம் தலைவருக்கு உற்றத்துணையாக இருந்தவர் இந்த சீலன் அண்ணா. இவருக்கு ஆசீர் இதயசந்திரன் என பல பெயர் உண்டு தலைவர் சொல்லியிருக்கிறார். தான் உயிருடன் இருப்பதுக்கு சீலன் தான்காரணம் எண்டு தலைவரின் உயிர் தோழன் இந்த சீலன் அண்ணா புலிகளின் இராணுவத்திற்கு எதிரான முதலாவது தாக்குதலை இவர் செய்தார். அத்தாக்குதல் பற்றி 15.10.1981 யாழ்ப்பாணம் கே.கே.ஸ் வீதியில் கடைக்கு பொருட்கள் வாங்கவந்த இராணுவதின் மீது தாக்குதல் ஒன்றை செய்து 2 இராணுவதை கொண்டு ஒரு 303 ரக துப்பக்கியினை கைப்பற்றினார். இவரின் விருப்பம் எல்லாம் இராணுவதின் ஆயுதத்தினை பறித்து அவர்களை தாக்குவதன் ஒரு சம்பவம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இரயில்வே கடமையில் இருந்த இராணுவதை தாக்கி ரி50 ரக ஆயுதம் ஒன்றை கைப்பற்றி பாசறைக்குள் சேர்த்தார் இவரின் சாதனைகள் தொடர்ந்தது இராணுவதிற்கு இவரின் பெயர் கேட்டாலே நடுக்கம்.
இந்த சாதனையாளன் நம்மை விட்டு பிரியும் அந்த வேதனையான நாள் 15-07-1983 பிற்பகல் 3 மணி மீசாலை கிராமம் அந்த வழியால் இயந்திர துப்பாக்கி களுடன் துவிச்சக்கர வண்டியில் சீலன் அண்ணா தலைமையில் போராளிகள் பயணிக்கிறார்கள் துரோகிஒருவனின் காட்டி கொடுப்பால் இராணுவதின் முற்றுகைக்குள் அகப்பட்டு உடம்பில் குண்டு துளைத்த போது தன்னை சுட்டு விட்டு போகும்படி மற்றபோராளிக்கு கட்டளை இட்டார் தளபதியின் கட்டளைக்கு இணங்க அவரும் சுட்டுவிட்டு அவரின் ஆயுதத்தையும் எடுத்து செல்கிறார் அவர் இறக்கும் போது கூறியது, ஆயுதம் கவனம் இப்படி தமிழரின் விடிவுக்காக பாடுபட்ட போராளிதான் லெப்ரினன் சீலன் அண்ணா இவரின் பெயர் சுமந்து நிற்பதுதான் சால்ஸ் அன்ரனி சிறப்பு படையணி அவரின் சாதனைகள் ஆலமரம் அளவு நான் சொன்னது அதன் விழுதளவு எமது மக்கள் தமது பிள்ளைகளுக்கு இவர்களின் வீரத்தை சொல்லி கொடுங்கள் நன்றி.