என் அண்ணன் எழுதிய கவிதை




நாம் அணிவகுத்துள்ளோம்…நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!நாம் அணிவகுத்துள்ளோம்இழந்த எமது நாட்டை மீட்க

எதிரி நமது நாட்டைவஞ்சகமாக அபகரித்துவிட்டான்!அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறிஇழந்த நாட்டை மீட்கநாம் அணிவகுத்துள்ளோம்நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது
எமக்குத் தெரியும்ஆனால்…
அதைத் தாங்கக் கூடியமக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!எமது ஆத்ம பலமோ
அதைவிட வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்…ஆனால் எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்…நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே அணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்…எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள பிரதேசம் சாதிமதமென்னும்
பேய்களும்அலறி ஓடுகின்றன…எமது படையணி விரைகிறது…
எம தேசத்தை மீட்க!நாம் செல்லும் இடமெல்லாம்…
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்மிரண்டோடுகின்றனர்…!
உழைப்போர் முகங்களில்உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்புன்னகை உதயமாகிறது.

ஆக்கியவர் :திரு. வே.பிரபாகரன்
(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்
அவர்கள் எழுதிய கவிதை)

தேசியதலைவரின் சிந்தனைகள்

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"