நிலவரைப் பூக்கள்



நிலவறையில் தூங்கும் எம் உயிர் மறவர்களே
நீங்கள் மண்ணை மட்டும் நேசிக்க கற்றுத் தரவில்லை
எம் தமிழ் மண்ணிற்காக
மரணத்தைக் கூட நேசிக்கக் கற்றுத் தந்தவர்கள்
ஓலைச சுவடிகளில் மட்டும்
எம் தமிழ் பணி பொறிக்கப்படவில்லை
ஒவ்வொரு தமிழனின் நினைவுச் சுவடிகளில் அல்லவா பொறிக்கப்பட்டிருக்கிறது
உங்கள் தியாகம் நாளைய புதைப் பொருள் ஆராச்சியாளனுக்கு ஒரு நற்செய்தி
பிரபஞ்சத்தில் தமிழர் என்றொரு இனம் வாழ்ந்தான்
அவன் தன்மானம் மிக்கவன் என்பதை
கரையான்கள் கூட அழிக்க முடியாத
புகழ் உடம்பல்லவா
பார் முழுதும் பறைசாற்றும்

தேசியதலைவரின் சிந்தனைகள்

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"